அறிவமுது: மர்மங்களால் நிறைந்த பெர்முடா முக்கோணம்


அறிவியல் உச்சாணியில் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் இன்னும் விடுபடாத புதிர்களால் சூழப்பட்ட அதிசய உலகம்தான் இது. ஆனால், இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்க முடிந்த பல விஷயங்கள் ஒரு காலத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு, கடைசியில், சாத்தியமே இல்லை என்று பலரால் கைவிடப்பட்டவைதான். அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!  

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு உலகம் சூட்டியுள்ள பெயர்தான் பெர்முடா முக்கோணம். பல நூறு ஆண்டுகளாக மர்மமாகவே இருக்கும் பகுதி இது. 

விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் நீர்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது! அப்படி பயன்படுத்தப்பட்ட மரக்கலன்கள், கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களின் ஆபத்துக்களால் சூழப்பட்டிருந்தன. அதனால், அவற்றின் முடிவுகளின் தகவல்களும் அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த நீர்வழி வாகனங்களுடனேயே புதையுண்டு போயின. 

ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் குறித்து தகவல்கள் வெளிப்பட்டபோது, உலகம் மீண்டும் குழப்பத்தில் மூழ்கியது. அதாவது கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் காணாமல் போவது ஆச்சர்யமாக இருந்தது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சஸதனமாக இருக்கும். ஆனால், இவை கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை. நடுகடலிலேயே அடங்கி அமைதியாகி விடலாம். அவை 'ராக் வேவ்ஸ் (rock waves)' என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சஸ அலையாக உருவெடுத்து பெரும் கப்பல்களைகூட கவிழ்ந்துவிடும்! ஆனால், இந்த அலைகள் கப்பல்களை கவிழ்க்கின்றன என்றால், அப்படி ஆபத்தில் சிக்கி மூழ்கும் கப்பல்களிலிருந்து 'கட்டுப்பாட்டு அறைக்கு' எந்த தவல்களும் வருவதில்லையே ஏன்? இது தொக்கி நிற்கும் ஆச்சரியமாக இருந்தது. 


சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போவதற்கு, எரிமலை, பூகம்பம், ராட்ஸச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் சொல்ல முடியும். ஆனால், வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன? என்ற அடுத்த கட்ட கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கினர்

1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த ஐந்து F19 வகை போர் விமானங்கள், பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்து சென்றன. ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்வது அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேரத்தில், அந்த ஐந்து விமானங்களும் தரைக்கட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டன. கடைசியில், ஐந்து விமானங்களும் காணாமல் போயின! 

கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும், விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்ததுஅருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களின் சிக்னலை ரிசீவ் செய்திருந்தார்கள். அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து தடம் மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பதும் தெரியவந்தது! அதேநேரத்தில் விமானங்கள் 'பெர்முடா முக்கோணத்தில்' விழவில்லை. அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாட்டில், விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யமாகவே உள்ள விஷயமாகும்!

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கவே செய்தன. 

புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக போர்டோரீகா சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தன. ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது. திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது. அவரால் சரியான திசையை கண்டறிய முடியவில்லை. இருப்பினும் அவரது 15 ஆண்டு விமானம் ஓட்டும் அனுபவம் அவரை அந்த சிக்கலிலிருந்து தப்பிக்க உதவியது. 


தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை புரூஸ் கண்டார். அதிலிருந்து வெளிப்பட்ட ஒளி தப்ப முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஊட்டியது. வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின்னால் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. அவருக்கு முன் பக்கமாக கருமை நிற கோடுகள் வளையங்களாக தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறுகிறார். ஆனால், அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள்தான்! உண்மையில், அவரது விமானம் அந்தத் தொலைவைக் கடக்க பொதுவாக மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல அதிலிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டன. பஹாமா அடைய புரூஸ் கடக்க வேண்டிய தூரம் 160 கிலோமீட்டர். ஆனால் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் மூன்று நிமிடங்கள்தான்! ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பறந்திருக்கிறார். சாத்தியமே இல்லாத பயணம் இது. ஏனெனில் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே மணிக்கு 300 கி.மீட்டர்கள் தான்!

எவ்வாறு இது சாத்தியமானது? திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை கடந்து வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் 'வார்ம்ஹோல்' எனும் சூத்திரம். காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!



வார்ம்ஹோல் என்றால் என்ன என்பதை எளிமையாக ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்!

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். இது காற்றின் விசையை பயன்படுத்துவதால்தான் சாத்தியமாகிறது. தேபாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன அதாவது இயற்கையில் கிடைக்கும் சக்தியை பயன்படுத்தி பெரியளவு 'திறன்' செலவழிக்காமல் பலனடைவது.

தே போல் வார்ம்ஹோலையும் பயன்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! 

இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்தாகும். ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரமாகும்! 

டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது. ஐன்ஸ்டீன் தத்துவத்தின்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது. ஆனால், டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது. காரணம் பின்னாலிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது.

ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா? இல்லை தனிதனியா?  என்று இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை

ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது. சிறு சிறு துகள்களாகி விடுவோம்!  

விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

ஆதாரம்: டிஸ்கவரி சேனல்’ (தமிழ்)
 

Related

அறிவமுது 1813493069650441571

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress