குழந்தை இலக்கியம்: 'நல்லாரோடிருப்பதே நன்மை'


ஆட்டு மந்தையில்
ஒரு வெள்ளாடு
கூட்டத்தோடு இருந்ததடா!

மூத்தோர் சொல்லைக் கேட்காமல்
ஒருநாள்-
தனியே சென்றதடா!

காத்துக் கிடந்த ஓநாயும்
கடித்துக் குதறப் பாய்ந்ததடா!

காவல் நாய்களின் விழிப்புணர்வால்..
கடைசி நிமிடத்தில் பிழைத்ததடா!

நல்லவரோடு சேர்ந்திருந்தால்-என்றும்
நன்மை பயக்குமடா!

சற்று விலகிச் சென்றாலும்
தீமை நம்மைப் பற்றுமடா!

Related

குழந்தை இலக்கியம் 7902086865601382847

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress