குழந்தை இலக்கியம்: பாடல் - "இறைவன் மகா பெரியவன்!"


"நாரே தக்பீர்..!
அல்லாஹீ அக்பர்..!
நாரே தக்பீர்..!
அல்லாஹீ அக்பர்..!

இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு இணையற்றவன்..
படைப்பினத்தின் தலைவனவன்!
பிரபஞ்சத்தின் அதிபதி!
எல்லோருக்கும் எஜமானன்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்  
                                                                                                       ..... நாரே தக்பீர்..


வெறுமையிலிருந்து மனிதனைப் படைத்தான்..
மண்ணிலிருந்து 'ஆதமைப்' படைத்தான்..
"குன்" என்னும் சொல்லைக்  கொண்டு..
"ஆகுக..!" என்றே படைத்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
                                                                                                      ..... நாரே தக்பீர்..
சிந்திக்கும் திறனை அளித்துச்
'சுய சுதந்திரம்' தந்தான்..!
'கலீஃபா'வாக நியமித்து..
'பிரதிநிதித்துவம்' தந்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
                                                                                                    ..... நாரே தக்பீர்..
சட்டங்களைத் தந்தவன்..
உலகம் சீராய் இயங்க..
சட்டங்களைத் தந்தான்..
மனிதன் நேராய் வாழ..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
                                                                                                   ..... நாரே தக்பீர்..


'தூதர்கள்' என்னும் புனிதர்களை
மக்களிலிருந்தே தேர்ந்தெடுத்தான்..!
'வேதங்கள்' என்னும் வழிகாட்டுதலை..
போதிக்க அவர்களைப் பணித்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
                                                                                                ..... நாரே தக்பீர்..

ஒவ்வொரு மனித இனத்திலும்..
உலகின் ஒவ்வொரு மூலையிலும்..
தூதர்களை அனுப்பி..
நேர்வழிப் போதிக்க பணித்தான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!
                                                                                              ..... நாரே தக்பீர்..


ஆதம்.. நூஹ்.. இத்ரீஸ் நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
இப்ராஹீம்.. இஸ்மாயீல் .. இஸ்ஹாக் நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
யூனுஸ்.. மூஸா.. ஈஸா நபிகள்
போதித்ததெல்லாம் இதுதான்..!
இறுதித்தூதர் முஹம்மது நபிகள்..
போதித்ததெல்லாம் இதுதான்..
இறைவன் மகா பெரியவன் - அவன்
ஈடு - இணையற்றவன்..!"
                                                                                           ..... நாரே தக்பீர்..

- சின்னக்குயில்.





Related

குழந்தை இலக்கியம் 5827084491888716385

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress